Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பல மணி நேரம் காத்திருந்து பாட்டில்கள் வாங்கிச் சென்ற மது பிரியர்கள்

ஜுன் 19, 2020 09:29

திருவள்ளூர்: கும்மிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலேயே மதுபாட்டில்கள் விற்று தீர்ந்தன. இருப்பு இல்லாததால் மதுபிரியர்கள் பல மணி நேரம் காத்திருந்து மது வாங்கி சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சிப்காட் தண்டலச்சேரி  ரெட்டம்பேடு உள்ளிட்ட பல்வேறு மதுக்கடைகளில்  காலையிலேயே மதுபாட்டில்கள் முழுமையாக விற்று தீர்ந்தன. 

இந்த நிலையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் மதுபாட்டில்கள் கடைகளுக்கு வந்து சேரும் வரை மதுபிரியர்கள் கடை வாசலில் பல மணி நேரமாக காத்திருந்தனர். மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு மதுபாட்டில்கள் வேன்களில் வந்து சேர்ந்தன. 

மதுக்கடைகளின் வாசலில் காத்திருந்த மதுப்பிரியர்கள் உற்சாகமாக தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

கோணிப்பை: திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மதுக்கடைகள் எந்த பகுதியில் எப்போது வரை திறந்து இருக்கும் என்பது தெரியாத குழப்பத்தில் துணிப்பை கோணிப்பை போன்றவற்றில் அதிக அளவு மதுபாட்டில்களை பெரும்பாலானவர்கள் வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்